News February 16, 2025

மதுரையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

அனைத்து வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கே.கே.நகர் சென்ட்ரல் வங்கி முன்பாக மாலைநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், வார வேலை நாட்களை 5ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மதுரை நகர வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 6, 2025

மதுரை புதிய பாலத்திற்கு பெயர் தெரியுமா..?

image

மதுரை மாவட்டத்தில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேலமடை சந்திப்பு புதிய மேம்பாலத்தை நாளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.950 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என தற்போது முதல்வர் அறிவித்துள்ளார். இந்த பாலம் மூலம் மதுரை தொண்டி சாலை, கோரிப்பாளையம் முதல் சுற்றுச் சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்

News December 6, 2025

மதுரை: B.E முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மதுரை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, PG படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 6, 2025

மதுரை: குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூரம்

image

மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் கண்ணன் 22, கேரளாவை சேர்ந்த கலாசூர்யா 26, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கண்ணன் கலாசூர்யாவுக்கு மூன்றாவது கணவர். இரண்டாவது கணவருக்கு பிறந்த கலாசூர்யாவின் 2 வயது குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறிய கண்ணன் கடந்த மாதம் 5-ந் தேதி குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, கலாசூர்யாவுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் புதரில் வீசியுள்ளார். செக்கானூரணி போலீசார் விசாரணை.

error: Content is protected !!