News April 24, 2025
மதுரையில் ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் சீரமைப்பு

மதுரை கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளுக்காக பந்தல்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டை நிறுத்தி சில பகுதிகள் அகற்றப்பட்டன. இதனால் பந்தல்குடி கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேம்பாலப் பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.1 கோடியில் மீண்டும் சீரமைக்கப்படவுள்ளது.
Similar News
News January 7, 2026
மதுரை மக்களே.. இத DOWNLOAD பண்ணிக்கோங்க..!

மதுரை மக்களே, தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ, அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <
News January 7, 2026
மதுரையில் எந்தப் பதவியில் யார் ..?

1.மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
2.போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
3.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
4.மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
5.மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.
News January 7, 2026
மதுரை: கன்றுக்குட்டிக்கு அரிய வகை நோய்

மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் தென்மண்டல கால்நடைத்துறை அலுவலகமும், பன்னோக்கு கால்நடை மருத்துவமனையும் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2ம் தேதி பிறந்த கன்று குட்டி ஒன்றுக்கு பிறவியிலேயே ‘இக்தியோசிஸ் சுருக்கம்’ எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு அதன் உடல் நெருப்பில் கருகியது போன்று மாறியுள்ளதை கண்டு கால்நடைதுறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நவீன முறைப்படி கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.


