News April 24, 2025
மதுரையில் ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் சீரமைப்பு

மதுரை கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளுக்காக பந்தல்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டை நிறுத்தி சில பகுதிகள் அகற்றப்பட்டன. இதனால் பந்தல்குடி கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேம்பாலப் பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.1 கோடியில் மீண்டும் சீரமைக்கப்படவுள்ளது.
Similar News
News December 20, 2025
மதுரை கலெக்டர் அறிவிப்பு.!

மதுரை மாவட்டத்தில் 2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் 21 நாட்களுக்கு அனைத்து கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 4 மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவிட்டுள்ளார்.
News December 20, 2025
மதுரை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News December 20, 2025
மதுரை: ரூ.60 லட்சம் மோசடி: கூலாக போஸ் கொடுத்த கும்பல்..!

மதுரையை சேர்ந்த தம்பதியினரை டிஜிட்டல் அரஸ்ட் செய்ததாகக் கூறி, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த நீலகிரி மாவட்டம் கூடலுார் மரப்பாலம் சுதீஷ் என்ற உமர்பாரூக் (28), பந்தலுார் முகமது ரியாஷ் (29), கேரளா மலப்புரம் பாபு (49), அப்துல் கபூர் (43), முகமது சையது (34), முகமது சமீம் (34) என மொத்த கும்பலை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


