News April 15, 2024
மதுரையில் மானியத்துடன் தீவன அபிவிருத்தி திட்டம்

தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில், ஊடுபயிராக கால் நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்தால் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீவனச் சோளம், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை தீவனப்புல் வகைகளில் ஒன்றை ஊடு பயிராக பயிரிடலாம். ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஒரு ஹெக்டேருக்கு 7500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 2 கால்நடைகளுடன் அரை ஏக்கர் விவசாய நிலம் அவசியம்.
Similar News
News November 26, 2025
மதுரை: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 26, 2025
மதுரை: கொலையில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பாலமுருகன் 40.பெற்றோர் இறந்த நிலையில் பராமரிப்பின்றி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். நவ.17 காலை ஊர் மயானத்தில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் விசாரித்ததில் அப்பகுதி கட்டட தொழிலாளர்கள் மாயமானது தெரிந்தது. தொடர் விசாரணையில் யூனியன் ஆபீஸ் காலனி கேசவன் 23, பொட்டுலுபட்டி சேதுபதி பாஸ்கர் 23 மற்றும் 17 வயது 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
News November 26, 2025
மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாணவி என்று தெரிந்தும் சட்ட விரோதமாக திருமணம் செய்தார். இதனால் அவர் 6 மாத கர்ப்பமானார். இந்த தகவல் மகளிர் ஊர்நல அலுவலர் பத்மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.


