News May 15, 2024

மதுரையில் பயனடைந்த 1 லட்சத்து 14 ஆயிரம் பேர்!

image

மதுரையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 1,545 பள்ளிகளைச் சார்ந்த 1,14,095 மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பசியோடு பள்ளிக்கு வரும் பிள்ளைகளை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக் கூடாது என்ற நோக்கில் நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News November 28, 2025

மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News November 28, 2025

மதுரை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

image

மதுரை மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.11.2025. சம்பளம் – ரூ.35,400 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 28, 2025

மதுரை: சகோதரியின் வீட்டை அடித்து நொறுக்கிய முதியவர்கள்

image

மதுரை அருகே காஞ்சரம் பேட்டையை சேர்ந்த பஞ்சவர்ணம்(56), அவரது வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு வீடு கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் முத்துமாயி(70), பழனியம்மாள்(60) ஆகியோர் சேர்ந்து அந்த இடம் தனக்கு தந்தை கொடுத்ததாக கூறி பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!