News November 25, 2024
மதுரையில் நாளை கரண்ட் கட்

மதுரை மாவட்டத்தில் மின் சம்பந்தமான மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும். கீழையூர்,அட்டப்பட்டி, கொடுக்கம்பட்டி,கீழவமளவு,செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி,தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி,சருகுவலையபட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலூர், தர்மதானபட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை ஏற்படும்.
Similar News
News December 5, 2025
மதுரை: அரசு பஸ் மோதி துடிதுடித்து வாலிபர் பலி.!

தும்பைப்பட்டி அருகே நான்கு வழிச்சாலை ரோட்டோரம் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற 35வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோத, தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தும்பைப்பட்டி விஏஓ சரவணன் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தார். திருச்சி துறையூரை சேர்ந்த பஸ் டிரைவர் சுதாகரை கைது செய்த மேலூர் போலீசார் இறந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
News December 5, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் நாளை காலை காலை 9 முதல் மதியம் 3 மணி வரை விஸ்வநாதபுரம், மகாத்மாகாந்தி நகர், முல்லைநகர், சிவக்காடு, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, கருமாத்துார், மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி,கோவிலாங்குளம், வடபழஞ்சி தென்பழஞ்சி, பல்கலை நகர்.மற்றும் இதன் சுற்று பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 4, 2025
BREAKING திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தாமதம்.!

திருப்பரங்குன்றத்தில் இரவு 7மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை தீபம் ஏற்றப்படவில்லை. தீபம் ஏற்றுவதற்காக அங்கு திரண்டுள்ள இந்து முன்னணி மற்றும் பாஜகவினரை அனுமதிக்காமல், கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் தீபம் ஏற்றப்படுமா.? இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இரவு 10:30க்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


