News November 25, 2024
மதுரையில் நாளை கரண்ட் கட்

மதுரை மாவட்டத்தில் மின் சம்பந்தமான மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும். கீழையூர்,அட்டப்பட்டி, கொடுக்கம்பட்டி,கீழவமளவு,செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி,தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி,சருகுவலையபட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலூர், தர்மதானபட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை ஏற்படும்.
Similar News
News December 4, 2025
மதுரை: மயங்கி கிடந்தவரை மீட்டவர் விபத்தில் பரிதாப பலி

புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த லோகேஸ்வரன் 28. மெடிக்கல் கம்பெனி விற்பனை பிரதிநிதி. தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருடன் நத்தம் நெடுஞ்சாலை கடவூர் அழகர்கோவில் மலை ரோட்டில் காரில் சென்ற போது, சாலை ஓரத்தில் அடிபட்டு கிடந்தவரை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார். பின்னர் சாலையைக் கடந்த போது திடீர்னு வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஸ்வரன் உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 4, 2025
மதுரையில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக மதுரையில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கே <
News December 4, 2025
அலங்காநல்லூர் அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வலசை கிராமத்தைச் சேர்ந்த விஜய் பிரபாகரன் 26. எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனை அடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


