News April 7, 2025
மதுரையில் தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம்

மதுரை மாவட்டத்தில் ”வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்” என தொழிலாளர்துறை எச்சரித்துள்ளது. மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என்பதால் விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.
Similar News
News November 28, 2025
BREAKING மதுரையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ.29) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக, மாணவர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
மதுரை: சு.வெங்கடேசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு

மதுரையில், சு.வெங்கடேசன் எம்பி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலா நாத் சிங் மற்றும் இயக்குநர் பி.என்.புஷன் ஆகியோர் ஹாக்கி அணிகளுக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர். FIH ஹாக்கி மேன்ஸ் ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் கனடா மற்றும் ஐர்லாந்து அணிகள் மைதானத்தில் இறங்கிய போது, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
News November 28, 2025
மதுரை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

மதுரை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


