News April 7, 2025
மதுரையில் தமிழில் பெயர் பலகை இல்லை என்றால் அபராதம்

மதுரை மாவட்டத்தில் ”வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்” என தொழிலாளர்துறை எச்சரித்துள்ளது. மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என்பதால் விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.
Similar News
News December 2, 2025
மதுரை: தூங்கி கொண்டிருந்த ரவுடி குத்தி கொலை

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை போலீசாரின் ரவுடி பட்டியில் உள்ளவர். வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளியே வந்த 10 நாட்களாக நிலையில், அப்பகுதி நாடக மேடையில் நேற்று மாலை தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது, பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: விஷம் குடித்து பெண் தற்கொலை

திருமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் மனைவி லட்சுமி(55). இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சமீபமாக தொடர்ந்து வலி தாங்க முடியாமல் போக, விஷம் குடித்து நேற்று மயங்கி கிடந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இன்று உயிரிழந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <


