News March 26, 2025

மதுரையில் செருப்பே அணியாத விசித்திர கிராமம்

image

மதுரை அருகே உள்ள அந்தமான் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்குள் செருப்பு அணிவது இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதற்கு காரணம் கருப்பசாமி மீது உள்ள பக்திதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊர் எல்லைக்குள் வரும்போதும் செருப்பை கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனை மீறினால் சாமி பலி வாங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. *புது தகவல்னா பகிரவும்*

Similar News

News November 20, 2025

மதுரை: இரு டூவீலர்கள் மோதல்; முதியவர் பலி.!

image

திருவாரூரை சேர்ந்த நாகராஜன்(68) திருப்­பத்தூர் மேலூர் ரோட்­டில் பைக்கில் நேற்று சென்றார். நாவினிப்­பட்டி அருகே புதுக்­கோட்டையை சேர்ந்த ராமன் என்­பவர் ஓட்­டி வந்த பைக் நாகராஜன் பைக் மீது மோதி­யது. இதில் நாகராஜனுக்கு பலமாக அடிபட்டு அரசு மருத்துவமனை­யில் சேர்த்­த­னர். அங்கு
அவர் இன்று உயிரிழந்­தார். இது குறித்து மேலூர் போலீ­சார்
விசாரிக்கின்றனர்.

News November 20, 2025

மதுரை: 10ம் வகுப்பு சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

image

மதுரை சிந்­தா­மணியை சேர்ந்­த­வர் கார்த்திகை செல்­வம்(23). இவர் 10ம் வகுப்பு படிக்­கும் மாணவியை இரு வீட்­டா­ருக்கும் தெரியாமல் திருமணம்
செய்து கொண்டு குடும்­பம் நடத்தினார். இதில் மாணவி 5 மாத கர்ப்­பமானார். ஊர் நல அலுவலர் பத்­மா­ இது குறித்து திருப்­ப­ரங்­குன்­றம் மகளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்ய, போலீ­சார் அவர் மீது போக்சோ சட்­டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்­றனர்.

News November 20, 2025

மதுரை: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

image

மதுரை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <>க்ள்க் <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!