News August 14, 2024

மதுரையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

Similar News

News November 5, 2025

மதுரை: சொல்பேச்சு கேட்காத மகன்கள்; தாய் விபரீத முடிவு

image

மதுரை ஆனையூர் வாகை­குளத்தை சேர்ந்­த­வர் விமலா (34). இவரது கண­வர் இறந்­து விட்ட நிலையில் இவ­ரது இரண்டு மகன்­களும் இவ­ரது பேச்சு மற்றும் அறிவுரைகளை கேட்­கா­மல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனமு­டைந்த அவர் நேற்று வீட்­டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசா­ரணை நடத்தி வருகின்­ற­னர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 5, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை அழகர்கோவில் மற்றும் அச்சம்பத்து துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொய்கரைப்பட்டி, நாயக்கம்பட்டி, அழகர் கோவில் கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாத்தூர்பட்டி, தேத்தாம்பட்டி மற்றும் மந்திகுளம் பகுதிகளில் இன்று (நவ.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

News November 5, 2025

மேலூரில் பொது பணித் துறை ஊழியர் திடீர் மரணம்

image

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொது பணி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு இறந்து போனார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!