News December 5, 2024

மதுரையில் ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ

image

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய மூர்த்தி அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக இன்று உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மூர்த்தி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியரை தேடி வருகின்றனர்.

Similar News

News November 3, 2025

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் திண்டாடடி வருகின்றனர்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில், மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய மெயின் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் ‘கம்ப்ளையின்ட் செல்’ என்ற ஆப் உள்ளது. இதில் பதிவு செய்யப்படும் புகார்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான புகைப்படத்தினை நிகழ்விடத்தில் அதிகாரிகள் பதிவேற்றம் செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

News November 3, 2025

மதுரை : B.E போதும் வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பி<>க்க: CLICK HERE .<<>>
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 3, 2025

மதுரையில் குண்டாசில் வாலிபர் கைது

image

மதுரை கோ. புதூர் அண்ணா நகரை சேர்ந்த பாப்பையா (30) இவர் வழிப்பறி செய்யும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பான வழக்குகளில் கைதான இவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவரை போலீசார் கண்காணித்தனர் அப்போதும் அவர் குற்ற செயல்களை தொடர்வது உறுதியானது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். போலீசார் பாப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!