News August 25, 2024

மதுரையில் அமையும் முதல் சரணாலயம்?

image

மதுரை அவனியாபுரம் அருகே சாமநத்தம் கண்மாய் அமைந்துள்ளது. கிருதுமால் நதியில் இருந்தும், வைகை ஆற்றில் இருந்தும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை இந்தக் கண்மாயில் ஆண்டு முழுவதும் பார்க்க முடிகிறது. மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ள தகவலால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News November 28, 2025

மதுரை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

image

மதுரை மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.11.2025. சம்பளம் – ரூ.35,400 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 28, 2025

மதுரை: சகோதரியின் வீட்டை அடித்து நொறுக்கிய முதியவர்கள்

image

மதுரை அருகே காஞ்சரம் பேட்டையை சேர்ந்த பஞ்சவர்ணம்(56), அவரது வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு வீடு கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் முத்துமாயி(70), பழனியம்மாள்(60) ஆகியோர் சேர்ந்து அந்த இடம் தனக்கு தந்தை கொடுத்ததாக கூறி பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.

News November 28, 2025

மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

image

மதுரை அருகே தென்னூரை சேர்ந்­த­வர் வீர­பத்திரன் (50 ). இவர் கட்­டிடத்தில் கம்பி­ கட்­டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்­டிடப் பணியில் இன்று ஈடு­பட்­டிருந்­தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்­ற­படி கம்பி கட்­டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்­பவ இடத்­தி­லேயே உயிரிழந்­தார். இது குறித்து திலகர் திடல் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!