News August 14, 2024

மதுபான கடைகள் இயங்க தடை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், கிளப்கள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ஆம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

தஞ்சை மீனவர்கள் 3 பேர் விடுவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த அக்.16-ம் தேதி ராஜா, முரளி, குமார் ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற போது, டீசல் தீர்ந்து போனதால் இலங்கை எல்லைக்குள் சென்‌ற‌னர். இதையடுத்து 3 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், 3 பேரையும் படகுடன் இந்தியா கடற்படையிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.

News November 5, 2025

தஞ்சை: 300 கிலோ போதை பொருள் கடத்தல்

image

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குகிடமாக வாகனங்களை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தி வந்த கும்பகோணம், புளியம்போட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விம்பாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 296 கிலோ குட்கா போதைப்பொருட்கள், 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News November 5, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!