News August 14, 2024
மதுபானக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (ஆக.15) டாஸ்மாக் மதுபானகடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2/FL3/ FL3A/ FL3AA, உரிமம் பெற்ற கிளப் ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் நாளை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
சிவகங்கை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

சிவகங்கை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 18, 2025
சிவகங்கை: வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்

திருப்புவனம் வைகை ஆற்றில் ஆகஸ்ட் 29 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மிதந்தன. தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் வைகை ஆற்று மேம்பாலத்தில் இரு புறமும் சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். சி.சி.டி.வி., திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனுடன் இணைக்கப்பட்டுள்ளது. போலீசார் ஸ்டேசனில் இருந்தபடியே வைகை ஆறு மற்றும் பாலத்தில் சென்று வருபவர்களை கண்காணிக்க முடியும்.
News September 18, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.