News August 14, 2024
மதுபானக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (ஆக.15) டாஸ்மாக் மதுபானகடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2/FL3/ FL3A/ FL3AA, உரிமம் பெற்ற கிளப் ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் நாளை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
சிவகங்கை: பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது

கீழக்குளம் கிராமம் அருகே உள்ள அடர்த்தியான மற்றும் முள்ளான காட்டு பகுதியில், ஒரு history sheeter பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பல history sheeters கூடியிருந்தார்கள். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 40 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் குழு முற்றுகையிட்டு இருவரை கைது செய்ததோடு 2 வாள்கள், 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் சில சந்தேகப்பொருட்கள் பறிமுதல் செய்தது. தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
News November 24, 2025
சிவகங்கைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


