News May 7, 2025
மதுக்கடைகளை மூட உத்தரவு: மீறினால் நடவடிக்கை

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இன்று (மே 1) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுக்கடைகள் மற்றும் அந்த கடைகளில் செயல்படும் மதுக்கூடங்களை நேற்று (ஏப்.30) இரவு 10 மணிக்கு பூட்ட வேண்டுமென ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. மேலும், முறைகேடாக மது விற்பனையில் ஈடுபட்டால், வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மேலாளர்களிடம் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 23, 2025
சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா…

சென்னை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவில் உள்ள நர்ஸ், பார்மிஸ்ட், அலுவலக உதவியாளர், லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 311 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th முதல் எம்பிபிஎஸ் படித்தவர்கள் என பதவிக்கு ஏற்ப தகுதி மாறுபடும். மாதம் ரூ.10,000- 90,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 23, 2025
சென்னை மக்களே கொண்டாட்டத்துக்கு ரெடியா?

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை வெளிப்படுத்தும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 14, 2026 மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகரின் 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
News December 23, 2025
கிறிஸ்துமஸ் பண்டிகை: மின்சார ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கடற்கரை -செங்கல்பட்டு, சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும். இதேபோல் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 மணி 2மணி வரை செயல்படும்.


