News May 7, 2025

மதுக்கடைகளை மூட உத்தரவு: மீறினால் நடவடிக்கை

image

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இன்று (மே 1) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுக்கடைகள் மற்றும் அந்த கடைகளில் செயல்படும் மதுக்கூடங்களை நேற்று (ஏப்.30) இரவு 10 மணிக்கு பூட்ட வேண்டுமென ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. மேலும், முறைகேடாக மது விற்பனையில் ஈடுபட்டால், வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மேலாளர்களிடம் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 14, 2025

சென்னை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News December 14, 2025

சென்னையில் குடுகுடுப்பைக்காரர் போல் வந்து திருட்டு

image

சென்னை கொட்டிவாக்கத்தில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்து, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செய்வினை இருப்பதாக கூறி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன், குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்றும், பூஜை செய்வதாக கூறியும் பெண்ணின் 5 சவரன் நகை, ரூ.10,000 திருடியுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலி குடுகுடுப்பைக்காரர் பாலமுரளி என்பவர் கைது செய்யப்பட்டார்.

News December 14, 2025

சென்னை: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க

image

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!