News August 16, 2024
மதிய உணவினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையலறையினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News September 19, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள்!

நமது மயிலாடுதுறையில் நாளை 20.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 500 மணி வரை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை ஏற்படும் பகுதிகள்!
1.பொறையார்
2.தரங்கம்பாடி
3.கிடாரங்கொண்டான்
4.செம்மனார்கோயில்,
5.பாலையூர்
6.வடமட்டம்
7.கோமல்
ஆகிய சுற்றுவட்டாரா பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 19, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விபரப்பட்டியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில், இன்று இரவு 11மணி முதல் நாளை காலை 6 மணிவரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கை குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News September 18, 2025
சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியீடு

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதில் கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் நடுக்கம் ஏற்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையை சார்பில், ஒரு பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காய்ச்சல் நடுக்கம் ஏற்பட்ட 27 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு மாற்று மருந்து கொடுத்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.