News June 27, 2024

மதகுகளை தயாராக வைத்திருக்க கமிஷனர் அறிவுறுத்தல்

image

கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் குளங்கள், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உக்கடம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் மதகுகளை மழை நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News November 16, 2025

கோவையில் வசமாக சிக்கிய நபர்!

image

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆர்.எஸ். புரம் காவல்துறையினருக்கு நேற்று முந்தினம் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குப் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பாலச்சந்திரன் (57) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

News November 16, 2025

சிலம்பம் போட்டியில் வெள்ளி வென்ற கோவை மாணவி!

image

கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று (நவ.15) மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், 2- ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்ற +1 மாணவி ரித்திகாவை, மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் நேரில் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாணவியின் தந்தை ராமன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பிரின்ஸ், தொண்டர் அணி பகுதி துணை அமைப்பாளர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

News November 15, 2025

கோவை மாவட்டத்தின் வானிலை நிலவரம்

image

கோவை வானிலை நிபுணர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நாளை நாளை கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை: அதிகபட்சம் 31°C, குறைந்தபட்சம் 22°C என்ற அளவில் பதிவாகும். திங்கள் கோவை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளனர்

error: Content is protected !!