News June 27, 2024

மதகுகளை தயாராக வைத்திருக்க கமிஷனர் அறிவுறுத்தல்

image

கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் குளங்கள், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உக்கடம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் மதகுகளை மழை நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News November 9, 2025

கோவையில் நாய் குட்டிகளை கொன்றவர் கைது

image

கோவை சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா போதையில் நேற்று முந்தினம் இரவு சிச்சு விஷ்ணு என்பவர் இரண்டு நாய் குட்டிகளை கல்லால் அடித்து கொன்றார். அவர் மீது வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர், நேற்று கைது செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (08.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 8, 2025

கோவையில் சோக சம்பவம்!

image

மதுரையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகள் தேவிப்பிரியா, கோவை வைசியால் வீதியில் உள்ள மாமா சந்திரகுமார் என்பவரது வீட்டில் தங்கி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!