News June 27, 2024
மதகுகளை தயாராக வைத்திருக்க கமிஷனர் அறிவுறுத்தல்

கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் குளங்கள், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உக்கடம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் மதகுகளை மழை நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 21, 2025
வாக்காளர் சேர்ப்பில் எச்சரிக்கை அவசியம்: வானதி சீனிவாசன்

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிவடைந்த நிலையில், போலி வாக்காளர்கள் சேர்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புதிய சேர்க்கைகளில் தேர்தல் ஆணையம் கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
News December 21, 2025
கஞ்சா சாக்லேட் விற்ற நபர் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனை ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ச்சன பிரியா (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 232 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.
News December 21, 2025
கஞ்சா சாக்லேட் விற்ற நபர் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனை ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ச்சன பிரியா (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 232 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.


