News April 12, 2025

மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

நெல்லையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான முகாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (நவ.08) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 8, 2025

நெல்லை: போஸ்டர் ஒட்டியதற்கு கொலை; கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

நெல்லை கொங்கன்தாம்பாறை சமுதாய நலக்கூடம் அருகே கண்ணீர் அஞ்சலி வால் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் இசக்கி பாண்டி(23) என்பவர் 2013ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கபட்டது. பச்சாண்டி(39), இன்பராஜ்(39), முத்துக்குமார்(37) ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1500 அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட 3 வது கூடுதல் அமர்வு நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

News November 8, 2025

நெல்லையில் ரூ.69 கோடியில் பிரம்மாண்ட நூலகம்

image

நெல்லையில் ரூ.69 கோடியில் காயிதே மில்லத் பெயரில் பிரம்மாண்ட நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஐகிரவுண்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தை அமைச்சர்கள், அதிகாரிகள் இதற்கு தேர்வு செய்தனர். இப்போது நூலகம் அமைக்க அரசு டெண்டர் விடுத்துள்ளது. அதில் 2 அடுக்கு கட்டடத்தில் படிப்பகம், மினி திரையரங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அறை, ஆய்வரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளது.

error: Content is protected !!