News April 12, 2025
மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 10, 2025
நெல்லை: ரூ.10 அதிகம் வாங்கிய நடத்துனருக்கு ரூ.17,000 அபராதம்

தென்திருப்பேரையைச் சேர்ந்தவர் இசக்கி செல்வம்(51). இவர் நெல்லையிலிருந்து மதுரைக்கு அரசு பஸ் சென்ற போது மாற்றுத்திறனாளி டிக்கெட் ரூ.40க்கு பதில் ரூ.50யாக நடத்துனர் வாங்கியதுடன் பஸ் நிலையம் வெளியே இறக்கி விட்டார். இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் தொடர்ந்து வழக்கை நெல்லை நுகர்வோர் ஆணையம் நேற்று விசாரித்து இசக்கி செல்வதற்கு ரூ.17,010 அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டது.
News October 10, 2025
நெல்லை மாவட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

நெல்லை மாவட்டத்தில் அக்.12ம் தேதி 1.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 964 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் வைத்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நாளை மறுநாள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. *ஷேர்
News October 10, 2025
BREAKING நெல்லை கல்லூரியை மூட நோடீஸ்; உணவக உரிமம் ரத்து

நெல்லை, திடியூரில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி. கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தி, சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து.