News April 12, 2025
மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
நெல்லையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (அக்.14) மேலப்பாளையத்தில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குவிந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மொத்தம் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 14, 2025
BREAKING: சந்திப்பு பேருந்து நிலையத்தில் பஸ் மோதி ஒருவர் பலி

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த நபரின் உடலை மீட்டு பாலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு
News October 14, 2025
நெல்லை: மாலை 4 மணி வரை மழைப்பதிவு விபரம்

இன்று அக்டோபர் 14 காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேரன்மகா தேவியின் 21 மில்லிமிட்டர் மழை பெய்தது. அம்பாசமுத்திரம் 8 மில்லி மீட்டர் பாளையங்கோட்டை 7 மில்லி மீட்டர், மணிமுத்தாறு, நாங்குநேரி தலா 2 மில்லி மீட்டர், நெல்லை 3. 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.