News April 12, 2025
மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 13, 2025
கல்லூரி பேராசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஏ யூ டி மற்றும் மோட்டார் அமைப்பின் பொதுச்செயலாளர்கள் சேவியர் செல்வகுமார், செந்தாமரை கண்ணன் ஆகியோர் இன்று நெல்லையில் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்; கோரிக்கைகளை நிறைவேற்றி வலியுறுத்தி நாளை கருப்பு நிற உடை அணிந்து கல்லூரிகளில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் 15ஆம் தேதி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் 16ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
News October 13, 2025
போராட்டத்தை தடுக்க போலீஸ் முயற்சியா? – எஸ்பி பகீர் தகவல்

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி அருகே மஞ்சங்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்தாததை கண்டித்து போராட்டம் நடத்த இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போராடும் மக்களை போலீஸ் தடுக்க முயல்வதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு கூறி வருகிறது. இது முற்றிலும் தவறானது; சட்டப்படியான போராட்டத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
News October 13, 2025
நெல்லை மின்வாரியத்தின் மழைக்கால எச்சரிக்கை

மழைக்காலம் தொடங்கி விட்டதால் நெல்லை மாவட்ட மின்வாரியம் சார்பில் பொது மக்களுக்கு மின் விபத்து இன்றி செயல்படுவது குறித்த விளக்கங்களை தினமும் அளித்து வருகின்றனர். இன்று விடுத்துள்ள அறிவிப்பில், வீடுகளில் உள்ள பழைய உருகிய மின் இணைப்பு கம்பிகள் இருந்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே எலக்ட்ரீசியன் வைத்து பழைய உருகிய மின்கம்பிகளை உடனடியாக மாற்றி அமைப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.