News April 14, 2025
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் வட்டாரம், ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருப்பதுடன், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்று இருக்க வேண்டும். தகுதிவாய்ந்த கூட்டமைப்புகள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News April 18, 2025
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் தளமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். தீராத நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 18, 2025
இலவச கல்வி: எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News April 18, 2025
கள்ளக்குறிச்சி: ரூ. 1 லட்சம் வரை அபராதம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் சட்ட முறையாக அமல்படுத்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் கட்டாயம் எனவும், இல்லை என்றால் தொழிற்சாலை விதிகள் படி ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.