News April 10, 2025
மணிமேகலை விருதுக்கான அறிவிப்பு வெளியானது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2024,2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் வட்டார அமைப்புகளில் சிறந்து விளங்கிய குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. நேற்று (ஏப்-09) வெளியிடப்பட்ட அறிவிப்பில் 15-04-25 முதல் விண்ணப்பம் தொடங்கவுள்ளது. 30-04-25 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
திருப்பத்தூர்: தென்கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள்!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே..,தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 1785 அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. தனியாக தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க டிச.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 21, 2025
திருப்பத்தூர்: குழம்பில் தவறி விழுந்த குழந்தை!

திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மேல்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தேஜாஸ்ரீ என்ற 3 வயது குழந்தை, நேற்று(நவ.20) தனது வீட்டில் கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து, பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், குழந்தையை அவரது பெற்றோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 21, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (நவ.20) இரவு முதல் இன்று காலை (நவ.21) வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை குறைக்க பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.


