News November 25, 2024
மணப்பாறையில் விபத்தில் 2வயது குழந்தை உயிரிழப்பு

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த நல்ல பாண்டியன் டூவீலரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது 2 வயது மகள் பிரமிக்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
திருச்சி: கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

1.மாநில கட்டுப்பாட்டு அறை-1070
2.மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077
3.மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-0431-2415031
4.காவல் கட்டுப்பாட்டு அறை-100
5.விபத்து உதவி எண்-108
6.தீ தடுப்பு, பாதுகாப்பு-101
7.குழந்தைகள் பாதுகாப்பு- 1098
8.பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 25, 2025
திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை

திருச்சி மாவட்ட காசநோய் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் மற்றும் 1 ஓட்டுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும், காசநோய் பிரிவு துணை இயக்குனர் அலுவலகத்தில், வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், பிடாரமங்கலம், சீலைப்பிள்ளையார்புதூர், நாகையநல்லூர், சின்னப்பள்ளிபாளையம், பெரியப்பள்ளிபாளையம், பெரியநாயக்கன்பட்டி, புதுப்பாளையம், சீதப்பட்டி, கேசரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


