News November 25, 2024
மணப்பாறையில் விபத்தில் 2வயது குழந்தை உயிரிழப்பு

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த நல்ல பாண்டியன் டூவீலரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது 2 வயது மகள் பிரமிக்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
BREAKING: திருச்சி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவர் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட 2477 அரியவகை ஆமைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நாகையைச் சேர்ந்த பயணியை கைது செய்ததுடன், அவர் கடத்திவந்த ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
News November 24, 2025
திருச்சி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) அதிகாலை வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


