News November 25, 2024
மணப்பாறையில் விபத்தில் 2வயது குழந்தை உயிரிழப்பு

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த நல்ல பாண்டியன் டூவீலரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது மாணிக்கம் பிள்ளை சத்திரம் என்ற இடத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது 2 வயது மகள் பிரமிக்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
திருச்சி: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
மணப்பாறை: பொதுமக்கள் நடமாட தடை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், ஜன.5 முதல் 7 ஆம் தேதி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
திருச்சி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2019ம் ஆண்டு மணப்பாறை ஆண்டவர் கோவில் பகுதியில் ஜெகதீஷ் பாண்டியன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டடார். இவ்வழக்கில் கைதான வேடசந்தூரைச் சேர்ந்த அரவிந்த்-க்கு ஆயுள் தண்டனையும், பேகம்பூரைச் சேர்ந்த முத்துவேல், திருச்சியைச் சேர்ந்த பாதுஷா, ஆனந்த், தேனியைச் சேர்ந்த மதன்குமார் உள்ளிட்டோருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


