News June 27, 2024

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறனாய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 14, 2025

கும்பகோணம்: அதிமுக கிளைக் அவைத்தலைவர் படுகொலை

image

கும்பகோணம் அருகே மாத்தூர் ஊராட்சியில் பெட்ரோல் பங்க் மற்றும் வட்டி தொழில், ரியல் எஸ்டேட் செய்யும் மாத்தூரில் அதிமுக கிளை கழக அவைத்தலைவர் கனகராஜ் (70) நேற்று இரவு அவரது இல்லத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாச்சியார்கோயில் போலீசார் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு அனுப்பினர்.

News September 14, 2025

நாட்டு வெடி விற்பனை செய்த குற்றவாளி கைது

image

கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம், அம்மன் நகரில் தீபாவளியை முன்னிட்டு எவ்வித முன் அனுமதியும் இன்றி நாட்டு வெடிகளை விற்பனை செய்வதாக இரகசிய தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதன்படி பாபநாசம் டிஎஸ்பி முருகவேல், மேற்பார்வையில் கபிஸ்தலம் காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் குற்றவாளியான உமையாள்புரத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 41 மூட்டை வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது

News September 14, 2025

தஞ்சை: இளைஞர்களே இந்த வாய்ப்பு உங்களுக்கு

image

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 3,665 காலிப்பணியிடங்களுக்கான காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 17ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது . இந்த பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:30 முதல் 4:30 மணி வரை நடைபெறும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!