News June 27, 2024
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறனாய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 11, 2026
தஞ்சை: 510 பேருக்கு பணி நியமன ஆணை

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நேற்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில் 2,172 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட 510 பேருக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பணி நியமண ஆணைகளை வழங்கினார். மேலும், 355 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கும், 79 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
News January 11, 2026
தஞ்சை: மளமளவென பற்றி எரிந்த கடை

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் பழைய பஸ் நிலையம் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் திடீரென அவரது கடையிலில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
News January 11, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


