News June 27, 2024
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறனாய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 14, 2025
தஞ்சாவூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய<
News October 14, 2025
தஞ்சை: 500 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவர்கள்

பெருமகளூர் அரசினர் மேல்நிலை பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று குறுங்காடுகள் அமைக்கப்பட்டது. விழாவில், ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தங்கமணி முன்னிலை வகித்தார்.
News October 14, 2025
தஞ்சை: பிணமாக கரை ஒதுங்கிய வாலிபர் உடல்!

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியரான பாரதி (24) என்பவரின் சடலம் நேற்று திங்கள்கிழமை மாலை மீட்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்றில் மூழ்கிய அவரை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் படித்துறையில் சடலம் ஒதுங்கிய நிலையில், போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.