News June 27, 2024
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறனாய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 22, 2026
தேர்தல் பணி; முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு!

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பி வெளியிட்டுள்ளார். அதல், வருகிற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல்துறையோடு இணைந்து செயல்பட, முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு முன்னாள் படைவீரர்கள், தங்களது அடையாள அட்டை, மு.படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ exweltnj@tn.gov.in என்ற முகவரியிலோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 22, 2026
தஞ்சாவூர்: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

தஞ்சாவூர் மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT!
News February 22, 2026
தஞ்சாவூர்: அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி – சோகம்

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ்(24) மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன்(24) ஆகிய இருவரும் பைக்கில் திருச்செந்தூர் சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அம்மணிசத்திரம் அருகே வந்த போது பைக் மீது அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


