News April 2, 2025

மக்கள் தொடர்புத்திட்ட முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

image

அகரம்சீகூர் கிராமத்தில், 09.04.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அகரம்சீகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அகரம்சீகூர் கிராம நிருவாக அலுவலகத்தில் அல்லது வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 14, 2025

குன்னம்: முப்பெரும் விழாவில் பங்கேற்ற அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி லப்பைகுடிகாடு பேரூராட்சி கிழக்கு ஜமாளி நகரில், லப்பைகுடிகாடு கிழக்கு ஜும்ஆ பள்ளிவாசல் நடத்தும் முப்பெரும் விழா, மஸ்ஜித் குபா (பள்ளிவாசல்) திறப்பு விழா, ஷரீஅத் விளக்க விழா, நிஸ்வான் பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 14, 2025

பெரம்பலூர்: ரூ.96,210 சம்பளம்..வங்கியில் வேலை!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

image

முற்காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் காலப்போக்கில் மருவி, தற்போது பெரம்பலூர் என அழைக்கப்படுகிறது. இதுபோல இப்பகுதியில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்த காரணத்தால் அதிலிருந்து பல சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்த நிலையில், ”பிரம்பலூர்” என்றும், அது காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!