News March 24, 2024

மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பலகை

image

திண்டுக்கலில் இன்று மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்திலும், ரயில்வே நிலையம், மேலும் மக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்கள், திரையரங்கம், அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பலகை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2025

திண்டுக்கல் போக்குவரத்து கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 60 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 20, 2025

4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடம்பன் குளம் அருகே நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு கணவன் மனைவி தற்கொலைக்கு முயற்சி; கணவன் கவலைக்கிடம், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு ஆறு மருத்துவர்கள் கொண்ட குழு ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News April 19, 2025

திண்டுக்கல் காவல் வாகனங்கள் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அவர்கள் இன்று (19.04.2025) ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் வாகனங்கள், குறிப்பாக உதிரிபாகங்கள் மாற்ற வேண்டிய வாகனங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது

error: Content is protected !!