News April 21, 2025

மக்கள் குறைவிற்கு முகாமில் 580 கோரிக்கை மனுக்கள்

image

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி, 580 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பெற்றுக்கொண்டார்.

Similar News

News April 22, 2025

குமரியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு 34 லட்சம் நிதி

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 34 லட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 26.86 லட்சம், ஆதி திராவிடர் இனத்தவருக்கு 6.80 லட்சம், பழங்குடி இனத்தவருக்கு 0.34 லட்சம் நிதி பெறப்பட்டு உள்ளது” என்றார்.

News April 22, 2025

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு பிரிவு

image

நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் கொண்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு 11 கோடியே 40 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகர்கோவிலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 22, 2025

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன்

image

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக 42 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு பூதப்பாண்டியில் அரசு மருத்துவமனையில் இசிஜி கருவி அமைக்க இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!