News April 18, 2024
மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள்-ஆட்சியர்

மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெற மதுரை மக்கள் தேவையான ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News December 9, 2025
மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.
News December 9, 2025
அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி ஹேமலதா(24). இவர் தனது நகையை கனரா வங்கியில் அடகு வைத்து ரூ. 8.20 லட்சத்துடன் மதுரை கல்லுப்பட்டியை நோக்கி அரசு பஸ்ஸில் நேற்று சென்று கொண்டு இருந்தார். கொட்டாம்பட்டி அருகே பஸ் வந்த போது அவர் வைத்திருந்த பணத்தில் ரூ.5 லட்சம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
மதுரை: டிகிரி போதும்; ரூ.25,000 சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழி நெறிகாட்டும் மையம் சார்பில், மதுரையில் உள்ள Royal Enfield நிறுவனத்தில் Sales Executive பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 18-25 வயதுக்கு உட்பட்ட, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த லிங்கை <


