News March 25, 2025
மக்களே கட்டாயம் மிஸ் பண்ணாதீங்க

நீலகிரி: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News November 19, 2025
நீலகிரியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொல்குடியினர்
புத்தாய்வு திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு
₹10,000 நிதியுதவியும் முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு ₹25,000 நிதியுதவியும் வழங்கபட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை
www.fellowship.tntwd.org.in என்ற
இணையதள பக்கத்தில் (12/12/2025)
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
News November 19, 2025
மசினகுடி: யானை காணவில்லை

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட, வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில உலா வந்த ரிவால்டா, என்ற காட்டு யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் குறைபாடு காரணமாக, பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு இருந்தது, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென யானை காணாமல் போனது. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
News November 19, 2025
நீலகிரி மாவட்டம்: தடை அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் போன மாவட்டமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் அதிகமான சுற்றுலா பயணிகள் டால்பின் ஹவுஸ் மற்றும் லாம்ஸ் ராக் போன்ற சுற்றுலா தலங்களில் விரும்பி ரசிக்கின்றனர். தற்போது சுற்றுலா தலங்களில் நடைபாதை மற்றும் சாலை பணிகள் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.


