News March 28, 2025
மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 6, 2025
புதுவை: அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி

திரு-பட்டினம் சதீஷ்குமார் என்ற மாதவராஜ். இவருக்கு இன்னும் திருமணமாக நிலையில், சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
புதுவை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க…
News December 6, 2025
புதுச்சேரியில் விவசாயிகள் சங்கம் போராட்டம்

புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், “மாநில அரசு உரிமைகளை பறிக்க மத்திய அரசு விதை உரிமைச் சட்டம் – 2025 கொண்டு வந்துள்ளது. மின்சார திருத்த சட்டம் -2020 விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் கொண்டு வர மாட்டோம் என கூறிய மத்திய அரசு, மின்சார திருத்த சட்டம் 2025 கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு சட்டங்களை எதிர்த்து போராட்டம் விரைவில் நடைபெறும்.” என தெரிவித்துள்ளார்.


