News March 28, 2025
மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News September 17, 2025
புதுவை: திருநள்ளாறு கோயில் வாட்ஸ்அப் எண் வெளியீடு!

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஆலோசனை, குறைகள் மற்றும் தரிசன குறைபாடுகளை சுட்டிக்காட்டும் புகைப்படங்கள், குரல்செய்தி மற்றும் குறுஞ்செய்திகளை +91 949 872 8334 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 17, 2025
புதுச்சேரி: பாஸ்போர்ட் விசாரிப்பு போலீசார் இடமாற்றம்

புதுச்சேரி மாநிலத்தில் காவல்துறையில் பாஸ்போர்ட் விசாரிப்பு பிரிவில் பணிபுரியும் நான்கு போலீசார் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று இடமாற்றம். மேலும் போலிசார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களிடம் விசாரணையின் போது லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டி.ஜி.பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 16, 2025
மத்திய அமைச்சருடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

புதுவைக்கு வருகை தந்துள்ள மத்திய தொழிலாளர் நலம் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை, இன்று காலாப்பட்டு அருகே உள்ள தனியார் ஹோட்டலில், முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுவை சபாநாயகர் செல்வம் உடனிருந்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.