News March 28, 2025
மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News November 26, 2025
புதுவை: தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

கோட்டிச்சேரியை சேர்ந்தவர் ராணி(68). இவரது கணவர் நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், இவர்களது 4 மகன்களும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனியே வசித்து வரும் ராணி, தனக்கு வாழப் பிடிக்கவில்லையென கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 26, 2025
புதுவையில் இன்று மின் தடை அறிவிப்பு

புதுச்சேரி, திருபுவனை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாகூர் மற்றும் பண்டசோழநல்லூர் மின்பாதைகளில், இன்று(நவ.26) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பாகூர், பாகூர் பேட், கன்னியா கோயில், புதுநகர், மூர்த்திக்குப்பம், நிர்ணயப்பட்டு குடியிருப்பு, பாளையம், சேலிய மேடு, அரங்கனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று புதுச்சேரி மின்துறை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
புதுவை: பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

பாகூரை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில், அப்பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் லாட்டரி சீர் ஏஜெண்ட் எனவும், அவரிடம் தங்களுக்கு பரிசு விழுந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பரிசு பெற பரிசீலனை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என கூறியயதை நம்பி ரூ.7லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தி அப்பெண் ஏமாந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


