News March 28, 2025
மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 98 – 102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News November 26, 2025
பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
பெரம்பலூர் இளைஞர் சாதனை

பெரம்பலூர் கேகே நகரை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் மும்பையில் நடைபெற்ற அமெச்சூர் ஒலிம்பியா இந்தியா என்ற பாடிபில்டர் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலிருந்து 150 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் மணிகண்டன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெரம்பலூரின் புகழை நிலைநாட்டியதாக மக்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News November 26, 2025
பெரம்பலூர்: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி

சேலத்தை சேர்ந்தவர் கருப்பையா சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். இவரும், இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த காளிமுத்துவும் சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார், கருப்பையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


