News August 11, 2024
மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வாணியந்தல், மடப்பட்டு, பாவந்தூர், பின்னல்வாடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Similar News
News December 20, 2025
கள்ளக்குறிச்சி: மணி பர்ஸுக்காக கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி: சித்தப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் தனது மணி பர்ஸை அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு தொலைத்துவிட்டார். இந்த நிலையில், தனது பர்ஸை அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி தான் எடுத்துள்ளார் எனக் கூறி, முரளி மற்றும் ராஜேஷ் சேர்ந்து பொன்னுசாமியை மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரில் கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 20, 2025
கள்ளக்குறிச்சி: சாமி கும்பிட வந்த மகனுக்கு பேரிழப்பு

சேலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (33), தாய் உண்ணாமலை-யுடன் (65) வாணாபுரத்தில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பியபோது, வடபொன்பரப்பி அருகே வேகத்தடையில் நிலைத்தடுமாறி தாயும், மகனும் கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உண்ணாமலை உயிரிழந்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 20, 2025
கள்ளக்குறிச்சி: கணவரை மிரட்டிய கள்ளக்காதலன்!

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வரதன் (24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெண்ணின் கணவர் கண்டித்ததால், அந்த பெண் வரதனுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வரதன், பெண்ணின் கணவரை தொடர்பு கொண்டு, அவரது மனைவியுடன் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


