News August 11, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வாணியந்தல், மடப்பட்டு, பாவந்தூர், பின்னல்வாடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Similar News

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: கபீர் பிரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

கலவரம் மற்றும் வன்முறையின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களது உறவினர்களை காப்பாற்றும் நபர்களின் உடல் மற்றும் மன வலிமையை பாராட்டி 3 பேருக்கு காசோலையும் குடியரசு தினத்தன்று கபீர் பிரஸ்கார் விருது வழங்கப்படும். இந்த விருது பெற தகுதியுடையவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகிற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்!

image

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News December 13, 2025

கள்ளக்குறிச்சியில் ரேஷன் குறைதீர் முகாம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், பெயர் சேர்த்தல்/நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை, செல்போன் எண் பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். மேலும், பொதுமக்கள், இதில் தேவையான ஆவணங்களுடன் நேரில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

error: Content is protected !!