News August 11, 2024
மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வாணியந்தல், மடப்பட்டு, பாவந்தூர், பின்னல்வாடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Similar News
News November 5, 2025
கள்ளக்குறிச்சி விவசாயிகளின் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று(நவ.5) முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளான்மை விரிவாக்க மையங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும். பி.எம்.கிசான் நிதி உதவி பெற இந்த அடையாள எண் அவசியமாகும். மேலும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணத் தொகை பெறாத விவசாயிகளும் இதில் விண்ணப்பிக்கலாம்.
News November 4, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.4) இரவு முதல் நாளை (நவ.5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 4, 2025
கள்ளக்குறிச்சி: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)


