News August 7, 2024
மக்களுடன் முதல்வர் முகாமில் உடனடி நிவாரணம்

தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் நேரடியாக வந்து மனு செய்த உடனேயே தயாரான பட்டா மாறுதல் ஆணையை பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார். உடன் தேனி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர். இம்முகாமில் திருவிழா கூட்டம் போல் பொதுமக்கள் திரளாக வந்திருந்து பயன்பெற்றனர்.
Similar News
News October 20, 2025
தேனி: ரூ.1,50,000 மதிப்பிலான பன்றிகள் திருட்டு.!

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் பன்றி பண்ணை வைத்து நடத்தி வரக்கூடிய நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பண்ணையில் இருந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான ஏழு பன்றிகளை சிலர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் நேற்று (அக்.19) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 20, 2025
கம்பத்தில் தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). இவர் நகை பட்டறை வைத்து தொழில் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு (அக்.19) பதிவு.
News October 20, 2025
தேனி மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: போடி:04546-280299, கம்பம்:04554-271292, கடமலைகுண்டு:04554-227226, மயிலாடும்பாறை:04554-227258, பெரியகுளம்: 04546-231299, தேனி:04546-252699,ஆண்டிப்பட்டி:04546-242222, உத்தமபாளையம்: 04554-252699 மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க.