News May 15, 2024

மக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்ற நாகை எஸ்.பி. ஹர்ஷ் சிங்

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் நாள் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 13 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில்,  நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான புகார்தாரர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 12, 2025

நாகையில் மீன்பிடி துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா

image

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்கன் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும்பணியை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட
செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 12, 2025

பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்பி செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 9 மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News November 12, 2025

நாகை: CM ஸ்டாலினை விமர்சித்தவருக்கு சிறை

image

தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை தவறாக விமர்சித்து, வாட்சப் மற்றும் முகநூலில் புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ் என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் மீது, திமுக நிர்வாகி கொடுத்த புகாரில் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளார்.

error: Content is protected !!