News April 6, 2025

மகாவீர ஜெயந்தி முன்னிட்டு அரசு விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் 10, 2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை நாளாக இருக்கும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்களின் பட்டியலில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தி தினத்தில் மாவட்டத்தில் உள்ள ஜைன சமுதாயத்தினர் பல்வேறு மத நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.

Similar News

News December 1, 2025

ராணிப்பேட்டை: 2,147 செவிலியர் பணியிடங்கள்.. நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News December 1, 2025

ராணிப்பேட்டை: கார், லாரி நேருக்கு நேர் மோதல்.. விபத்து!

image

சோளிங்கரிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் பாராஞ்சியில் நேற்று நவ.30ஆம் தேதி காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் காயத்துடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸில் சோளிங்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் சாலையோரம் இருந்த ஒரு வீடு மற்றும் மின் கம்பம் முறிந்து விழுந்தது. விபத்து குறித்து சோளிங்கர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 1, 2025

ராணிப்பேட்டை: தொடப்பள்ளியில் 2 சிலிண்டர் திருட்டு!

image

அகவலத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சமையலறையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்து இரண்டு சிலிண்டர்களை திருடி சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நேற்று நவம்பர் 30ஆம் தேதி பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர் .சிலிண்டர் திருட்டு குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!