News April 5, 2025

மகாவீர் ஜெயந்தியன்று மதுபானக் கடைகள் மூட உத்தரவு

image

காஞ்சிபுரத்தில், வரும் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இது, தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1989 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மேற்கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 7, 2025

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஆரநேரி அரசு பள்ளி அருகே நேற்று (ஏப்ரல் 6) கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்ததில், உ.பி.,யைச் சேர்ந்த சின்டூ (27) என்பவர், கேரளாவைச் சேர்ந்த அபுஷாகீர் (37) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, அபுஷாகீர் (37), மம்தாஜ் பாபி (49), பிஷ்வஜீத் (30), ஷிபு (24), சின்டூ (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

News April 6, 2025

காஞ்சி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

காஞ்சி மாவட்ட ஆட்சியரக உதவி எண்-044 – 27237424, 27237425, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை -1077, மாநில கட்டுப்பாட்டு அறை-1070, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-100, விபத்து உதவி-108, தீயணைப்பு உதவி-101, ஆம்புலன்ஸ் உதவி-102, குழந்தை பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல்-1091, BSNL-1500, டெங்கு காய்ச்சல் உதவி-8098160003, பேரிடர் மீட்பு-04177 -246269, 9442105169. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்

News April 6, 2025

காஞ்சிபுரம் கோட்டம் முதலிடம்

image

காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு தொடர் வைப்பு கணக்கு, பொன்மகன் வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், பல வித அஞ்சல் கணக்குகள் தொடங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் காஞ்சிபுரம் கோட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.

error: Content is protected !!