News March 29, 2025

மகாத்மா ரயிலை நிறுத்திய சின்னாளப்பட்டி மக்கள்!

image

திண்டுக்கல்: பிப்.2 1946ஆம் ஆண்டு. அப்போது மகாத்மா காந்தி தனது கடைசி தென் இந்திய பயணத்தில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்லா ஊர் ஸ்டேஷனிலும் காந்தியடிகளின் ரயில் நிற்காது. அதனால், மகாத்மாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் இருந்த சின்னாளப்பட்டி மக்கள் ரயில்வே சிக்னலை மாற்றி அமைத்து மகாத்மா ரயிலை தங்கள் ஊரில் நிறுத்தச் செய்தனர்.

Similar News

News January 8, 2026

ஒட்டன்சத்திரம் அருகே பெண் துடிதுடித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இருளகுடும்பன்பட்டியைச் சேர்ந்தவர் வஞ்சம்மாள் (67).இவர் நேற்று ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள தாராபுரம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக வஞ்சம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வஞ்சம்மாள், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்/

News January 8, 2026

கோயில் இடிப்பு: திண்டுக்கல்லில் வெடித்த போராட்டம்!

image

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் முருகன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பழனி ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

News January 8, 2026

திண்டுக்கல்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

திண்டுக்கல் மக்களே பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!