News March 29, 2025

மகாத்மா ரயிலை நிறுத்திய சின்னாளப்பட்டி மக்கள்!

image

திண்டுக்கல்: பிப்.2 1946ஆம் ஆண்டு. அப்போது மகாத்மா காந்தி தனது கடைசி தென் இந்திய பயணத்தில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்லா ஊர் ஸ்டேஷனிலும் காந்தியடிகளின் ரயில் நிற்காது. அதனால், மகாத்மாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் இருந்த சின்னாளப்பட்டி மக்கள் ரயில்வே சிக்னலை மாற்றி அமைத்து மகாத்மா ரயிலை தங்கள் ஊரில் நிறுத்தச் செய்தனர்.

Similar News

News November 13, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (நவம்பர் 13) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறைக்குரிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

திண்டுக்கல்லில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார்

image

திண்டுக்கல்லில் கட்லா, ரோகு, மிர்கால் 16 லட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விற்பனை
மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு அணைப்பட்டி மீன்வள சார் ஆய்வாளர் பாப்பத்தியை கைபேசி 63748 26415 என்ற எண்ணிலும், பழநி மீன்வள ஆய்வாளர் சாந்தியை கைபேசி 75982 36815 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

நத்தம்: வெளிநாட்டில் கணவன்.. மனைவி அதிர்ச்சி முடிவு!

image

நத்தம் அருகே ஒத்தினிப்பட்டியை சேர்ந்தவர் கரந்தமலை (34). சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சிலம்பரசி (28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த கரந்தமலை, கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட கவலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிலம்பரசி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!