News August 8, 2024

மகள் சாவு குறித்து விசாரணை நடத்த தந்தை எஸ்.பி-யிடம் மனு

image

திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) இவர் இன்று (8ம் தேதி) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரளித்தார். அதில், “எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 13, 2025

குமரி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

குமரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News December 13, 2025

குமரியில் தொழிலாளி சடலமாக மீட்பு!

image

ஈசாந்திமங்கலம் ஞானதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (57). பல தோப்புகளில் மரத்தில் இருந்து தானாக விழும் தேங்காயை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (டிச.12) காலையில் சீதப்பால் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார்? வேறு எதும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 13, 2025

குமரி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04652-227339) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!