News August 8, 2024
மகள் சாவு குறித்து விசாரணை நடத்த தந்தை எஸ்.பி-யிடம் மனு

திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) இவர் இன்று (8ம் தேதி) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரளித்தார். அதில், “எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 9, 2026
குமரி: பைக் மோதி விபத்து; 3 பேர் காயம்..!

புதுக்கடை அருகே முன்சிறை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் தனது மகனுடன் பைக்கில் உணவு வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் விமல்ராஜ் பைக் மீது மோதியது. இதில் விமல் ராஜ், விஷ்ணு உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 9, 2026
குமரி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தக்கலை பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ்(23). 5 ஆண்டுக்கு முன்பு +2 படித்தபோது விபத்தில் சிக்கிய ஜெனிஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவரால் சரிவர செயல்பட முடியாததால் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜன.7.ம் தேதி இரவு மாடி அறையில் இருந்த ஜெனிஷ்க்கு சாப்பாடு கொடுக்க தாயார் மரிய புஷ்பம் சென்றபோது தூக்கில் இறந்த நிலையில் ஜெனிஷ் காணப்பட்டார். தக்கலை போலீசார் விசாரணை.
News January 9, 2026
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.


