News August 8, 2024
மகள் சாவு குறித்து விசாரணை நடத்த தந்தை எஸ்.பி-யிடம் மனு

திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) இவர் இன்று (8ம் தேதி) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரளித்தார். அதில், “எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 11, 2026
குமரி: ஆசிரியைக்கு ஆபாச செய்தி அனுப்பியவர் கைது..!

அருமனை பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது WhatsApp, Instagramஐ.டிக்கு பல எண்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் போலி Instagram ஐ.டி உருவாக்கி அவருக்கு ஆபாச செய்தி அனுப்பி மிரட்டலும் வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பைங்குளத்தை சேர்ந்த அருள்லிங்கம் என்பவரை நேற்று கைது செய்தனர்.
News January 11, 2026
குமரி: டெம்போ மோதி போலீஸ் ஏட்டு பலி..!

நாகர்கோவில் கிறிஸ்து நகரை சேர்ந்தவர் யூஜின் கிராஸ். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். ஜன.4 அன்று சாலையில் நடை பயிற்சியில் இருந்தபோது பின்னால் வந்த டெம்போ இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த யூஜின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.10) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
குமரி: திருமணம் ஆகாத விரக்தியில் பெண் தற்கொலை

நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தை சேர்ந்தவர் 33வயது பெண். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏக்கத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று (ஜன.10) காலை அவரது பெற்றோர் இதை பார்த்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோட்டார் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். (தற்கொலை தடுப்பு உதவி எண்: 104)


