News August 8, 2024
மகள் சாவு குறித்து விசாரணை நடத்த தந்தை எஸ்.பி-யிடம் மனு

திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) இவர் இன்று (8ம் தேதி) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரளித்தார். அதில், “எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
கன்னியாகுமரி பேரூராட்சியில் ரூ.1.15 கோடிக்கு ஏலம்

கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவ.15 முதல் ஜன.15 வரை சீசன் காலமாகும். இந்த 60 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் லட்சக்கணக்கில் இங்கு வந்து செல்கின்றனா். சீசன் காலத்தில் வருவாயை பெருக்கிக் கொள்ளும் விதமாக, தற்காலிக சீசன் கடைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 62 சீசன் கடைகள் மற்றும் காா் பாா்க்கிங் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


