News April 11, 2025
மகள் சாவில் சந்தேகம் போலீசில் தாய் புகார்

மோப்பிரிப்பட்டியை சேர்ந்த பிரகாஷ்-ஜெயசுதா தம்பதிக்கு நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது பிரகாஷ், ஜெயசுதாவை தாக்கியுள்ளார், அதனை தொடர்ந்து ஜெயசுதா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஜெயசுதாவை அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெயசுதாவின் தாய் நேற்று அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
Similar News
News October 31, 2025
மொரப்பூரில் நாளை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை ( நவ. 01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு பரிசோதனைகள் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 30, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-30) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News October 30, 2025
தருமபுரி அருகே பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த சரிதா சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் நேற்று அக்.29 காலை வெளியில் சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உள்ளே இருந்த 12 பவுன் நகை 250கிராம் வெள்ளி நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவலர்கள் வழக்குப்பதிந்து கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


