News March 20, 2024

மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை.

image

திருவள்ளூர் அடுத்த காக்களூர், பூந்தோட்டம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் அவர் உயிரிழந்ததிலிருந்து ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 19, 2025

திருவள்ளூர்: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் CBSE துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 12ஆவது படித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20,000 முதல் 56,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! விண்ணப்பிக்க டிச.22ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. ( SHARE IT )

News December 19, 2025

திருவள்ளூர் வாக்காளர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் (டிச.20) மற்றும் (டிச.21) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து உதவி மையங்களில் வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 19, 2025

பூந்தமல்லி பணிமனையில் 125 மின்சார பஸ்கள் இயக்கம்

image

திருவள்ளூர்: பூந்தமல்லி பணிமனையில் ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பஸ்கள் இன்று (டிச.19) முதல் இயக்கப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

error: Content is protected !!