News November 22, 2024

மகளிர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் 

image

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னி மற்றும் பேரிடம் பெண்கள் ஆகியோரை கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக நவ.23,24 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

விருதுநகர் அருகே வழுக்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி(25). இவர் அருகே உள்ள கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று டிச.1 முனியசாமி கடையை கழுவி கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து காயம் அடைந்து மயங்கினார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியசாமி உயிரிழந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

விருதுநகர்: 10th, 12th தகுதி.. மத்திய அரசு வேலை

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். கடைசி தேதி; டிச. 4, 2025 ஆகும். எல்லோருக்குமான நல்ல வேலைவாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

News December 2, 2025

சிவகாசி அருகே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை

image

சிவகாசி பள்ளபட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் பூ வியாபாரி ஜெயச்சந்திரன் 57. டிபி நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு மது அருந்தும் பழக்கமும் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் சரியாகவில்லை. இவர் வீட்டில் பிளேடால் தனது கழுத்தில், கையில் அறுத்துக் கொண்டார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!