News November 22, 2024
மகளிர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னி மற்றும் பேரிடம் பெண்கள் ஆகியோரை கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக நவ.23,24 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
சிவகாசி: பல்கலை சான்றிதழை அச்சடித்த மூவர் கைது

சிவகாசியில் உள்ள தனியார் அச்சகத்தில் கேரள மாநிலம் மலப்புரத்தில் இயங்கி வரும் பிரபல பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் போலியாக அச்சடிக்கப்படுவதாக கேரளா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த புகாரின் பேரில் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் கேரளா மாநிலம் மலபுரம் போலீசார் திடீர் சோதனை நடத்தி போலி சான்றிதழ் அச்சடிப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அச்சகத்தில் பணியாற்றி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <
News December 6, 2025
விருதுநகர் அருகே ரூ.15 லட்சம் மோசடி

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கீழக்கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த பாண்டி, பெருமாளம்மாள், ஈஸ்வரி, ராணி, விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சூரியகலா ஆகியோர் போலி நகையை அடகு வைத்து ரூ.15.94 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சாத்துார் ஜே. எம் 2 நீதிமன்ற உத்தரவுப்படி வெம்பக்கோட்டை போலீசார் பாண்டியை கைது செய்து மற்ற 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


