News February 8, 2025
மகளிர் பெட்டியில் டிஎஸ்பி விழிப்புணர்வு

குடியாத்தம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையொட்டி இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்கும் ரயிலில் மகளிர் பெட்டியில் சேலம் டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் போலீசார் ஆண்கள் யாராவது பயணம் செய்கிறார்களா? உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் 1039 அழைக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News April 21, 2025
ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News April 20, 2025
திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶️வட்டாட்சியர்,வாணியம்பாடி – 9445000512
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9445000511
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர்- 9445000511
▶️வட்டாட்சியர், நாட்றம்பள்ளி – 9384095150
▶️வட்டாட்சியர், ஆம்பூர் – 9443000478
▶️தாசில்தார், திருப்பத்தூர் – 9944853282
▶️வட்டாட்சியர், திருப்பத்தூர் – 9600883699
▶️தாசில்தார், வாணியம்பாடி – 7904947335
▶️மண்டல வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9047228349
SHARE பண்ணுங்க மக்களே
News April 20, 2025
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை ஏப்ரல் 21 அன்று திங்கள் தின வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் அளித்து பயன்பெறலாம். இந்தக் கூட்டத்தில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.