News January 24, 2025
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1200 கோடி கடன்

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 ஆம் ஆண்டில், சேலத்திலுள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு,ரூ.1602 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை ரூ.1200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ரூ.402 கோடியை, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் துவங்க ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிட வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 20, 2025
சேலம் வாக்காளர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். எனவே, பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் அல்லது voters.eci.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
ஆத்தூர் அருகே துடிதுடித்து பலி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த செல்லதுரை (42). பெயிண்ட் தொழிலாளியான இவர் நேற்று தாண்டவராயபுரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஏறி முருங்கை கீரை பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஒயர் மீது மோதியதில், மின்சாரம் பாய்ந்து செல்லதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 20, 2025
சேலம் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

சேலம்: அழகாபுரம் பிடாரியம்மன் கோவில் அருகே கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றப் பிணையில் (Bail) வெளியே வந்த வசந்தா, அதன்பின்னர் நீதிமன்ற விசாரணைகளுக்கு முறையாக ஆஜராகாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வசந்தா கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டர்


