News August 25, 2024
மகளிர் காவலர் கொலை செய்யப்படவில்லை

மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட மினி கொலை செய்யப்பட்டதாக வந்த செய்தி உண்மைக்கு மாறானது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தங்கை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News November 28, 2025
குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கரும்பாட்டூரை சேர்ந்தவர் கண்ணன் (42) தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மது குடித்துவிட்டு வீட்டின் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். கண்ணன் மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதனால் கண்ணன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டார். தென் தாமரைகுளம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
News November 28, 2025
குமரி: உங்கள் வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு!

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் டிசம்பர் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை மற்றும் பூதப்பாண்டி நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற உள்ளது.


