News August 17, 2024
மகளிர் உரிமைத்தொகை பொய் தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க பெறாதவர்கள் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் மனு வழங்கலாம் என கடந்த 2 நாட்களாக வாட்ஸ் ஆப் மூலமாக தவறான செய்தி பொதுமக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி முற்றிலும் தவறானது. பொய் தகவல் பரப்புபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
JUST IN: கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,80,626-ல் இருந்து 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.
News December 19, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News December 19, 2025
கிருஷ்ணகிரி: மனநல பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொடுமை

கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது இளம்பெண்ணை கடந்த 2021-இல் பாலியல் வன்கொடுமை செய்த அதே ஊரைச் சேர்ந்த சேம் ரிவெத் (41) என்பவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று (டிச.18) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு 5 ஆண்டு கூடுதல் சிறையும் விதிக்கப்பட்டு, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி லதா உத்தரவிட்டார்.


