News March 14, 2025

மகளின் கழுத்தை அறுத்த தாய் மீது வழக்கு

image

நெய்யூரைச் சேர்ந்தவர் விஜிலின் சாம் (44). இவர் மனைவி மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் அவர் அவரது மகள் விஜோலின் தீபா கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 14, 2025

குமரி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 20ம் தேதி முற்பகல் 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். *விவசாயிகளுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News March 14, 2025

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் 

image

நாகர்கோவில் மாநகரில் மாநகர அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாரதி மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் வடசேரி மீனாட்சிபுரம் பகுதிகளில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 126 கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஒன்பது கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 10 கடைகளுக்கு ரூ.22500 அபராதம் விதிக்கப்பட்டது.

News March 14, 2025

குமரிக்கு பட்ஜெட் அறிவிப்பு

image

▶️ திருவள்ளுவர் சிலை கண்ணாடி இழைப் பாலத்தை பார்வையிட சின்னமுட்டம் துறைமுகத்தை இரண்டாவது முனையமாக கொண்டு ரூ.2722 கோடியில் திருவள்ளுவர் சிலை வரை பயணிகள் படகுகள் இயக்கப்படும்.

▶️ கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் தேவையை நிறைவு செய்ய பணிகள் மேற்கொள்ளப்படும்.

▶️ மீன் இறங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.

error: Content is protected !!