News August 3, 2024
மகப்பேறு வார்டு உள்ளே செல்வதற்கு ஆதார் கட்டாயம்

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை கடத்தல் சம்பவத்தால் மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் “சீமான்ஸ் ” (மகப்பேறு வார்டில்) உள்ளே செல்வதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை கட்டாயம் என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் மக்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.
Similar News
News November 20, 2025
மறைந்த துணை மேயரின் தந்தை உடலுக்கு அமைச்சர் மரியாதை!

வேலூர் மாநகர தெற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சுனில்குமாரின் தந்தை மாணிக்கம் உடல் நலம் குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு இன்று (நவ. 20) பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட பலர் உடன் இருந்தனர்.
News November 20, 2025
வேலூர்: ஒரே நாளில் 17 பேர் மீது வழக்கு பதிவு!

வேலூர், ஏரியூரில் உள்ள திறந்த வெளிமைதானத்தில், நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மற்றும் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் இருதரப்பை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 20, 2025
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்தி வைப்பு!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.20) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


