News March 17, 2025

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த செல்லம்(48) என்பவரது மகன் அகிலன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்த நிலையில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் செல்லம் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், நேற்று முன்தினம் இரவு விஷம் அருந்தி செல்லம் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News May 8, 2025

பெரம்பலூர்: வனத்துறையில் வேலை!

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<> www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 8, 2025

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வேலூர், அரும்பாவூர், அசூர், நக்கசேலம் ஆகிய கிராமங்களில் வருகிற மே.10ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வளங்கள் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

image

பெரம்பலூர் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.

error: Content is protected !!