News January 22, 2025

மகனை கொலை செய்த கொடூர தாய் கைது

image

வளவனூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் 17ம் தேதி வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் விசாரித்ததில் விஸ்வலிங்கம் குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரது தாய் தோசையில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. சந்தேகம் வராமல் இருக்க உறவினர்கள் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் நேற்று (ஜன.21) கைது செய்தனர்.

Similar News

News October 19, 2025

BREAKING: மருத்துவர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் தைலாபுரம் தோட்டத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மருத்துவர் ராமதாஸ் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 19, 2025

விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது விழுப்புரம் 45 மில்லி மீட்டர் வளவனூர் 10 மில்லி மீட்டர் கோலியனூர் 10 மில்லி மீட்டர் கெடார் 5 மில்லி மீட்டர் முண்டியம்பாக்கம் 14 மில்லி மீட்டர் வானூர் 14 மில்லி மீட்டர் திண்டிவனம் 20 மில்லி மீட்டர் மரக்காணம் 10 மில்லி மீட்டர் செஞ்சி 4 மில்லி மீட்டர் வல்லம் 4 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும் நாளையும் மழை இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

News October 19, 2025

விழுப்புரம்: நிலம் வாங்க போறிங்களா…?

image

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்.
2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும்.
3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, இந்த<> லிங்கில்<<>> சென்று, ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் தேவையான விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம். ஷேர்

error: Content is protected !!