News December 5, 2024
மகனால் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிரிழப்பு

திருவெறும்பூர் அருகே காட்டூர் வின் நகர் 4ஆவது தெருவில் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாய் லட்சுமி சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
திருச்சி: 15.38 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

திருச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 23,68,967 வாக்காளர்களில் நேற்று (நவ.25) மாலை நிலவரப்படி 22,74,733 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 15,38,829 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
திருச்சி: வாகனம் ஏலம் அறிவிப்பு – கலெக்டர்

திருச்சி மகளிர் சிறையில் பயன்படுத்தப்பட்ட டெம்போ ட்ராவலர் வேன் வரும் டிச.11-ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் டிச.9-ம் தேதி வாகனத்தை பார்வையிட்டு கொள்ளலாம். ஏலம் நடைபெறும் தினத்தன்று ரூ.5000 முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் முடிந்த பின் உரிய தொகையுடன், வரிகளை செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


