News December 5, 2024

மகனால் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிரிழப்பு

image

திருவெறும்பூர் அருகே காட்டூர் வின் நகர் 4ஆவது தெருவில் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாய் லட்சுமி சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

திருச்சி: தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அறிவிப்பு

image

இந்திய அரசின் என்.எஸ்.டி.சி சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, திருச்சி மத்வ சித்தாந்த சபா பயிற்சி நிலையத்தில், வரும் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

திருச்சி: 12.89 லட்சம் கணக்கீட்டு படிவம் விநியோகம்

image

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (நவ.8) மாலை வரை 12 லட்சத்து 89 ஆயிரத்து 649 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

திருச்சி: 8-ஆம் வகுப்பு போதும், அரசு வேலை ரெடி!

image

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள <>’இங்கே’<<>> க்ளிக் செய்யவும். SHARE!

error: Content is protected !!