News September 13, 2024

போளூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் முருகா படி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், இன்று மதுரை வழக்கறிஞர் தாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் கூட்டு குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று நாள் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 16, 2025

தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

தி.மலை: கடன் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

image

செய்யாறு இளநீர் குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்னன் (26) தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரிடம் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பிரசாத் இவரை கடத்தி சென்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த கோகுலகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 16, 2025

தி.மலை: நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இயன்முறை மருத்துவர் (BPT) பணிக்கு தற்காலிக நியமன அடிப்படையில் 2 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளம் ரூ.13,000. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் 24.11.2025 க்குள் தேவையான ஆவணங்களுடன் சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!