News September 13, 2024

போளூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் முருகா படி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், இன்று மதுரை வழக்கறிஞர் தாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் கூட்டு குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று நாள் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 15, 2025

தி.மலை: கைப்பந்து விளையாடிய இளைஞர் மின்கசிவால் பலி!

image

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கைப்பந்தை எடுக்க சென்ற போது சபாஷ் (27) மின்கசிவின் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 15, 2025

தி.மலை:உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர் விண்ணப்பிக்க அழைப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க விரும்புவோர் www.agrimark.tn.gov.in இணையதளத்தில் நவம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மத்திய அரசின் மானியத்துடன் அமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கு தயார் நிலையில் உள்ளது. தேவைக்கேற்ப குத்தகைக்கு வழங்க தொழில் முனைவோர் அழைக்கப்படுகிறார்கள்.

News November 15, 2025

தி.மலையில் இன்று மின்தடை!

image

தி.மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை நடைபெறவுள்ளது. இதனால் ஊசாம்பாடி, வேங்கிக்கால், நம்மியந்தல், வள்ளிவாகை, நொச்சிமலை, வட ஆண்டாப்பட்டு, சடையனோடை சேரியந்தல், வட அரசம்பட்டு, கீழ் நாச்சிபட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!