News January 23, 2025
போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவர்களிடம் விசாரணை

கம்பம் வடக்குபட்டி பகுதியில் நேற்றிரவு 8 மணிக்கு 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் கொண்ட கும்பல் வீடுகளில் புகுந்து கஞ்சா சோதனை நடத்துவது போல் நடித்து நாங்கள் என்.ஐ.பி.போலீஸ் எனக் கூறி பணம் பறித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் வடக்கு போலீசார் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரித்ததில் சின்னமனூரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
Similar News
News December 18, 2025
பெரியகுளத்தில் திருக்குறள் போட்டி

பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜன.2,3,4 ஆகிய நாட்களில் கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டிகள் தென்கரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் புலவர், மு.ராஜரத்தினம், தமிழ் இலக்கிய மன்றம் அமைப்பாளர், சர்வோதய சங்கம், தென்கரை, பெரியகுளம் என்ற முகவரியில் டிச.31.க்குள் பதிவு செய்ய வேண்டும்.
News December 18, 2025
தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <
News December 18, 2025
தேனியில் 31 கிலோ புகையிலை கடத்தியர் கைது!

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் நந்தக்குமார் (51). இவர் ஓசூரிலிருந்து வத்தலக்குண்டுக்கு 31 கிலோ எடையுள்ள 2,100 புகையிலை பாக்கெட்டுகளை பைகளில் வைத்து தனியார் பஸ்சில் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காட்ரோடு செக் போஸ்டில் போலீசார் நந்தகுமாரை சோதனை செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


