News April 9, 2025
போலீஸ் ஆக ஆசையா? இங்கு போங்க!

ஈரோடு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.,) தாலுகா மற்றும் ஆயுதப்படை உட்பட 1,299 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை, 96552-20100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் மே.31ம் தேதி வரை செயல்படும்.
Similar News
News November 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
News November 15, 2025
ஈரோடு: ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு!

ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உதவியாக பணியாற்றும் ஊர்க்காவல் வீரர்களுக்கான பணியிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள ஊர்க்காவல் படை வீரர்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 14.11.25 முதல் 20.11.25 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 21.11.2025 மதியம் 2 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
பவானிசாகர்: விபத்து சம்பவ இடத்திலேயே பலி

பவானிசாகர் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பகுதியில் கூலி தொழிலாளி நாகராஜன். சாலையை கடக்க முற்பட்ட போது பவானிசாகரில் இருந்து புளியம்பட்டி நோக்கி வந்த பிக்கப் வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


