News February 23, 2025

போலீசுக்கு போக்குக்காட்டிய திருடர்கள் கைது

image

காஞ்சிபுரத்தில் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த 3 திருடர்களை 100க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களை ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து பணம், நகை, வாகனங்களைத் திருடி வந்த கும்பலிடமிருந்து, 25 சவரன் நகைகள், 1 வைர மோதிரம், 340 கிராம் வெள்ளிப் பொருட்கள், கார், ஆட்டோ, விலையுயர்ந்த இருசக்கர வாகனம் என 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Similar News

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த<> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

காஞ்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

image

காஞ்சி மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று (22.02.2025) காலை 8 மணிக்கு நெகிழி கழிவு சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். துணை ஆட்சியர் ஆஷிப் அலி, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் குப்பை நெகிழி சுத்தப்படுத்தினர்.

News February 22, 2025

தீவிரமாகும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

image

பணி நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆலை வளாகத்திலேயே கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

error: Content is protected !!